Monday, November 9, 2020

புன்னகைகள்

மரித்துப்போன இழப்புக்களுக்கு நிமிடந்தோரும் நினைவஞ்சலி செலுத்துகின்றன!
வஞ்சகமில்லா என் வெற்றுபுன்னகைகள்!!!!

Saturday, November 7, 2020

வேதனைகள்!

படிக்க நினைத்த
புத்தகத்தை
ஒரே மூச்சில்
படித்தாகிவிட்டது

ஒவ்வொரு வேலையாக இழுத்து போட்டு செய்தாகிவிட்டது

உறவு, நட்புகளோடு அலைபேசியில்
பேசியாகி விட்டது 

பரபரப்பாக
வேலை பார்த்ததில் ஒதுங்கியிருந்த
வேதனைகள்

மீண்டும்
கூரைஏறி அமர்ந்த
கோழியாய்
மனதில் ஏறிவிட்டது

இன்னும் 
என்ன செய்வேன்?

Sunday, November 1, 2020

காதலுடன்.!🖤

ஆண்டுகள் 
பல ஆயினும்
என் உயிர் 
என்னை விட்டு 
போனாலும்
உதிரும் 
ஒவ்வொரு துளி 
சாம்பலாக
காற்றில் 
கலந்து 
காத்திருப்பேன்
காதலுடன்...!🖤

Monday, October 26, 2020

என் செய்வேன்?

மெளனங்கள் கரைந்ததால்
மெல்லிதழ் விரிந்ததோ.?
உயிருடன் உலாவருகிறாள்
இதயத்தில் என் செய்வேன்.?

Thursday, July 25, 2019

மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளேன், எழுதுகோல் இன்றி.

என் சொற்களை அறிய விருப்பம் இருப்பின், முதலில் உன் சொற்களை ஒதுக்கிவிடு.

ஏனென்றால் இவை என் எண்ணங்களின் வெறுமையான தருணங்கள்.
சிக்கல்கள், பதில் எதுவுமில்லாத இரைச்சல்கள்,
உணர்ச்சி ரீதியாகப் பார்த்தால் மிகவும் மோசமான அனுபவங்கள்.

என் சொற்கள் மீன்பிடிக்கிற கதை போல - மீனவருக்கு சுவாரசியமாக, சந்தோசமாக இருக்கும்.

ஆனால் மற்றவர்கள் ஏன்  அதை கேட்டு கொட்டாவி விடுகிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது.